என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பூலாம்பட்டி கூடக்கல் குப்பனூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
Byமாலை மலர்15 Feb 2021 4:45 AM GMT (Updated: 15 Feb 2021 4:45 AM GMT)
பூலாம்பட்டி கூடக்கல் குப்பனூர் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழா நடந்தது. பெண்கள் உள்பட ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பூலாம்பட்டி கூடக்கல் குப்பனூர் மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மதியம் தீமிதி விழா நடந்தது. இதையொட்டி காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் முன்பு இருந்த தீக்குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். முதலில் பூசாரி இறங்கி வர அதனை தொடர்ந்து கரகம் எடுத்து வந்தவர்கள், கைக் குழந்தையை எடுத்து வந்தவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து நண்பர்கள் குழு சார்பில் புலிவேஷம், பொய்க்கால் குதிரை, சாமி வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து நண்பர்கள் குழு சார்பில் புலிவேஷம், பொய்க்கால் குதிரை, சாமி வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X