search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்புவனம் கோவில்
    X
    திருப்புவனம் கோவில்

    திருப்புவனத்தில் இன்று தை அமாவாசை சிறப்பு வழிபாடு

    திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர், சவுந்தர நாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
    திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர், சவுந்தர நாயகி அம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி- தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

    இன்று(வியாழக்கிழமை) தை அமாவாசை என்பதால் திருப்புவனத்தில் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வைகை ஆற்றங்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவிலில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது.
    Next Story
    ×