
இதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி வெள்ளாண்டிவலசு வன்னிய குல சத்திரிய ஆதிபரம்பரை காவடிகள் மற்றும் பருவதராஜகுல மகாஜனங்களின் காவடிகள் கட்டப்பட்டு பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர்.
வன்னிய குல சத்திரிய ஆதிபரம்பரை காவடிகள் கடந்த 2-ந் தேதி பழனிமலை ஏறி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பாதயாத்திரையாக நேற்று எடப்பாடிக்கு திரும்பினர்.
பருவதராஜகுல மகாஜனங்களின் காவடிகள் கடந்த 3-ந் தேதி பழனி மலைக்கு பாதயாத்திரையாக சென்று பழனி முருகனை தரிசனம் செய்து அன்று இரவு மலையில் தங்கினர். பின்னர் பாதயாத்திரையாக இன்று (புதன்கிழமை) எடப்பாடி திரும்புகின்றனர்.