கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள துலுக்கான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம்
கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள துலுக்கான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
கிருமாம்பாக்கத்தை அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள துலுக்கான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 7-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை மற்றும் முதல் கால யாக பூஜையுடன் விழா தொடங்கியது.
நேற்று காலை யாகசாலை பூஜையை தொடர்ந்து காலை 10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பிள்ளையார்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.