search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிருஷ்ணசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை
    X
    கிருஷ்ணசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை

    கிருஷ்ணசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை

    குழித்துறை அருகே மருதங்கோடு சூழிகோணம் ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மந்திரங்களை பாடினர்.
    குழித்துறை அருகே மருதங்கோடு சூழிகோணம் ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் தைமாத பஜனை பட்டாபிஷேக விழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடக்கிறது.

    நேற்று கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்கான மந்திரங்களை பாடினர். தொடர்ந்து ஆலம்பாடி கண்ணன் வரலாறு என்ற இசைத்தட்டு வெளியீடு நடைபெற்றது. ஆலய கமிட்டி தலைவர் வடிவேல் ராஜ் தலைமை தாங்கினார்.

    திருவண்ணாமலை சடைசுவாமி ஆசிரம மடாதிபதி திற்பாத சுவாமிகள் ஜானதேசிகன், அகில இந்திய சன்யாசிகள் சபை செயலாளர் ஸ்ரீ அனந்த நாயர், சோற்றானிக்கரை ரங்கனாதன் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டு இசைதட்டை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×