என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்20 Jan 2021 6:44 AM GMT (Updated: 20 Jan 2021 6:44 AM GMT)
முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலி்ல் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கம்மாபுரம் அடுத்த முதனை கிராமத்தில் பிரசித்திபெற்ற செம்புலிங்க அய்யனார் கோவில் மற்றும் பெரியநாயகி உடனுறை முதுகுன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிவாச்சாரியர்கள் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, விழா கொடியை ஏற்றி, மகா தீபாராதனை காண்பித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தீர்த்தவாரி வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, கோவிலுக்கு அருகில் உள்ள சித்தர் ஏரியில் வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து 29-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம், 30-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துராஜா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
திருவிழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிவாச்சாரியர்கள் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்து, விழா கொடியை ஏற்றி, மகா தீபாராதனை காண்பித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சுவாமி வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச தீர்த்தவாரி வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, கோவிலுக்கு அருகில் உள்ள சித்தர் ஏரியில் வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து 29-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம், 30-ந் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துராஜா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X