என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அகஸ்தீஸ்வரம் நாராயணசாமி கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி
Byமாலை மலர்5 Dec 2020 3:45 AM GMT (Updated: 5 Dec 2020 3:45 AM GMT)
நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழாவுக்கு அய்யாவழி பக்தர்கள் மற்றும் பெண்கள், வைகுண்ட சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ மற்றும் இனிப்புகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்கு உட்பட்ட நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 15-ம் நாளான நேற்று அய்யா வைகுண்டசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நேற்று மாலை 5 மணிக்கு அய்யாவழி பக்தர்கள் மற்றும் பெண்கள், வைகுண்ட சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ மற்றும் இனிப்புகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
முன்னதாக சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் ஏந்தியபடி குலசேகர விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் முத்துகுடைகள் முன்செல்ல ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்திற்கு அறங்காவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் ராஜ சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுலகிருஷ்ணன், ராஜலிங்கம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக ஏடு வாசிப்பு நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X