என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெருவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்30 Nov 2020 8:28 AM GMT (Updated: 30 Nov 2020 8:28 AM GMT)
நாகர்கோவில் பார்வதிபுரம், பெருவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இந்த விழா 2 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் பார்வதிபுரம், பெருவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு உதயகால பூஜை, 10 மணிக்கு செல்வ விநாயகருக்கும், சாஸ்தாவுக்கும் சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுதல், 6 மணிக்கு சந்தி மாடசாமிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு அம்பாள் வாகனத்தில் எழுந்தருளல், 8.30 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், நள்ளிரவு 12 மணிக்கு ராஜமேளத்துடன் அம்பாள் வாகனத்தில் வீதி உலா வருதல் போன்றவை நடைபெறும்.
நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு உதயகால பூஜை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும். அன்னதானத்தை ஊர் தலைவர் ஜெயசந்திரன் தொடங்கி வைக்கிறார். மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், 7 மணிக்கு சாயங்கால பூஜையும், 7.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சியில் ஊர் செயலாளர் ராஜேஷ்வரன் வரவேற்று பேசுகிறார். முடிவில் பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X