search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
    X
    எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் கிராமத்தில் எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் கிராமத்தில் எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவில் அருகில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், எஸ்.பி.கே.குழுமத்தலைவர் செய்யாத்துரைத்தேவர், பொன்னுச்சாமிதேவர், சிவகாசி கே.எஸ்.கந்தசாமி, நாட்டாமை பிரவேஷ், ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் எஸ்.கே.மயில்சாமி, சிவகாசி வேல்முருகன் பிராய்லர் கிருஷ்ணசாமி, ஆறுமுகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தலைவர் குருமூர்த்தி, முன்னாள் சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், பொது செயலாளருமான போடி சுப்புராஜ், பொருளாளர் கணேஷ்குழந்தை, துணைத்தலைவர் குமரவேல்சாமி, இணைசெயலாளர் வைரம், இணைப்பொருளாளர் மதன், சட்ட ஆலோசகர் ரத்தினவேல் பாண்டித்துரை மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×