என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தூத்துக்குடியில் சந்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்28 Nov 2020 3:38 AM GMT (Updated: 28 Nov 2020 3:38 AM GMT)
தூத்துக்குடி சந்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன.
நெல்லை தெட்சணமாற நாடார் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திவிநாயகர் கோவில் பழுதடைந்து இருந்தது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, பூர்ணாகுதி மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தன.
பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதையடுத்து கோவில் விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன. கும்பாபிஷேகத்தை செந்தில்நாதன் சிவம் தலைமையிலான அர்ச்சகர்கள் நடத்தினர்.
விழாவில் தெட்சணமாறநாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், சந்தி விநாயகர் கோவில் புனரமைப்பு குழு தலைவர் வி.எஸ்.கணேசன் நாடார், சங்க துணைத்தலைவர் முருகேசபாண்டியன், காரியகமிட்டி உறுப்பினர்கள் வி.தங்கவேலு, ராமர், சங்க இயக்குனர் எஸ்.அன்புலிங்கம், நிர்வாக சபை உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், டி.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெய்வா நர்சிங் ஹோம் டாக்டர் கள் ராஜேசுவரி, சரவணன், தேவிரம்யா, தொழில் அதிபர் கட்டேரிராஜ், பால்சுயம்பு, டி.டி.எம்.என்.எஸ். கல்லூரி பேராசிரியர் பாலமுருகன், சிற்பி பெருமாள், முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா, தூத்துக்குடி தெட்சணமாற நாடார் சங்க டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மாரியம்மாள் மற்றும் ஆசிரியைகள், சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவைருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X