என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாசாணியம்மன் கோவில் ஆண்டு விழாவில் 108 சங்காபிஷேகம்
Byமாலை மலர்25 Nov 2020 6:41 AM GMT (Updated: 25 Nov 2020 6:41 AM GMT)
மாசாணியம்மன், அரசாயிஅம்மன், அங்காள பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரர் கோவில் ஆண்டு விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாசாணியம்மன், அரசாயிஅம்மன், அங்காள பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரர் கோவில் ஆண்டு விழாவையொட்டி 108 சங்காபிஷேகம், சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. சங்காபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் 108 சங்காபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அரசாயிஅம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரமேஸ்வரருக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
ஆண்டு விழா மற்றும் சங்காபிஷேகத்தையொட்டி கோப்பணம்பாளையம், பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மாசாணிஅம்மன், பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், பரமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் ஆண்டு விழா விழாக்குழுவினர், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X