search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜேடர்பாளையம் அருகே பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
    X
    ஜேடர்பாளையம் அருகே பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    ஜேடர்பாளையம் அருகே பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் உள்ள செல்வவிநாயகர், பகவதி அம்மன், குட்டு முனியப்பன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூரில் உள்ள செல்வவிநாயகர், பகவதி அம்மன், குட்டு முனியப்பன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி புனித தீர்த்த குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். மாலை முதல்கால யாக பூஜையும், விநாயகர் பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் 2-ம் கால யாக பூஜையும், அதனைத் தொடர்ந்து செல்வவிநாயகர், பகவதி அம்மன், குட்டு முனியப்பன் ஆகிய கோவில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் ஆனங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×