என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சதுரகிரியில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
Byமாலை மலர்30 Oct 2020 8:59 AM GMT (Updated: 30 Oct 2020 8:59 AM GMT)
சதுரகிரியில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பிறகு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
பேரையூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த மாதம் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 28-ந்தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர். நேற்றைக்கு முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓடையில் நீர்வரத்து குறைந்து உள்ளது எனவும், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு, வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கலாமா? என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பக்தர்கள் காலை 10 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
இந்தநிலையில் நேற்று பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வந்தனர். நேற்றைக்கு முன்தினம் நள்ளிரவில் பெய்த மழையால் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து இருந்ததால் பக்தர்கள் நேற்று கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறை கேட்டின் முன்பு பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓடையில் நீர்வரத்து குறைந்து உள்ளது எனவும், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு, வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். அத்துடன் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கலாமா? என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பக்தர்கள் காலை 10 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X