search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    10 ஆயிரம் வளையல்களால் துர்கா தேவி அம்மனுக்கு அலங்காரம்
    X
    10 ஆயிரம் வளையல்களால் துர்கா தேவி அம்மனுக்கு அலங்காரம்

    நவராத்திரியையொட்டி 10 ஆயிரம் வளையல்களால் துர்கா தேவி அம்மனுக்கு அலங்காரம்

    தார்வார் நகரில் உள்ள துர்கா தேவி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி சுமார் 10 ஆயிரம் கண்ணாடி வளையல்கள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.
    தார்வாரில் ஆண்டுதோறும் தசரா மற்றும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தார்வார் நகரில் உள்ள துர்கா தேவி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று துர்கா தேவி அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதாவது, சுமார் 10 ஆயிரம் கண்ணாடி வளையல்கள் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
    Next Story
    ×