search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
    X
    பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

    பள்ளிப்பட்டு அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

    கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டில் ஸ்ரீமன் நாராயணசாமி நிழல் தாங்கல் என்ற பெயரில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு(பணிவிடை) மற்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி அய்யா வைகுண்டருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதையொட்டி அன்று காலையில் உகப்படிப்பு நடைபெற்றது. பின்னர் மதியம் 12 மணியளவில் அய்யா வைகுண்டருக்கு சிறப்பு அலங்காரத்துடன், உச்சிப்படிப்பும் அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணியளவில் உகப்படிப்பு நடைபெற்றது. இதில் கடலூர், புதுச்சேரி பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×