search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி கோவிலில் பகவதி அம்மன் வாகன பவனி
    X
    கன்னியாகுமரி கோவிலில் பகவதி அம்மன் வாகன பவனி

    கன்னியாகுமரி கோவிலில் பகவதி அம்மன் வாகன பவனி

    கன்னியாகுமரி பகவதி அம்மன் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்தார்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் 3 -வது நாளான நேற்று அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு வணிக வரித்துறை சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    இரவு 8 மணிக்கு பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளிப்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வந்தார்.

    நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், கோவில் மேலாளர் ஆறுமுகநயினார், பொருளாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×