search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி மலையப்பசாமி அலங்காரத்தில் நித்ய கல்யாணப்பெருமாள்
    X
    திருப்பதி மலையப்பசாமி அலங்காரத்தில் நித்ய கல்யாணப்பெருமாள்

    திருப்பதி மலையப்பசாமி அலங்காரத்தில் நித்ய கல்யாணப்பெருமாள்

    காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள திருப்பதி மலையப்பசாமி அலங்காரத்தில் காரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    காரைக்கால் பாரதியார் வீதியில் நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் உற்சவருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று நித்ய கல்யாணப்பெருமாள் முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்தநிலையில் நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி மலையப்பசாமி அலங்காரத்தில் காரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் செய்தனர்.
    Next Story
    ×