search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு அலங்காரம்
    X
    பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு அலங்காரம்

    பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு அலங்காரம்

    துறையூரை அடுத்த பெருமாள் மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி பூதேவி திருக்கோவிலில் பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    துறையூரை அடுத்த பெருமாள் மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி ஸ்ரீதேவி பூதேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், தயிர் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்டார்கள். பிரசன்ன வெங்கடாஜலபதிக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். துறையூர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 34 கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
    Next Story
    ×