தோரணமலை முருகன் கோவிலில் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து, மலை அடிவாரத்தில் உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
தோரணமலை முருகன் கோவிலில் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து, மலை அடிவாரத்தில் உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
பாவூர்சத்திரம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைதோறும், விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கோவில்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையொட்டி ஆவணி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
அதிகாலையில் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து, மலை அடிவாரத்தில் உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் மலை அடிவாரத்தில் சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருக பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனரும், அ.தி.மு.க. பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் உள்ளிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.