என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றம் அருகே 3 கோவில்களில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்31 Aug 2020 9:01 AM GMT (Updated: 31 Aug 2020 9:01 AM GMT)
திருப்பரங்குன்றம் அருகே உள்ள 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சாமிக்கு படைத்து வழிபட்டனர்.
திருப்பரங்குன்றம் அருகே பெரிய ஆலங்குளத்தில் வைகை மறச்சான் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலின் கோபுரகலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து கோவிலின் கருவறையில் வைகை மறச்சான் அய்யனாருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல வாலகுருநாதர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து கருவறையில் வாலகுருநாதர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கவுன்சிலருமான நிலையூர் முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்தனதேவர், ஊராட்சி செயலாளர் குரு, சசிகுமார், முருகன், சோணைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஒத்தஆலங்குளத்தில் சீலக்காரிஅம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதில் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, கிளை செயலாளர் சோமு, பிரதிநிதி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல வாலகுருநாதர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து கருவறையில் வாலகுருநாதர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கவுன்சிலருமான நிலையூர் முருகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் சந்தனதேவர், ஊராட்சி செயலாளர் குரு, சசிகுமார், முருகன், சோணைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஒத்தஆலங்குளத்தில் சீலக்காரிஅம்மன்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சாமிக்கு படைத்து வழிபட்டனர். இதில் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி, கிளை செயலாளர் சோமு, பிரதிநிதி மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X