search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
    X
    எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்

    எட்டெழுத்து பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை நடந்தது.
    கொரோனா தொற்று நோய் நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா நோய் அழிய வேண்டி, நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் நேற்று மாலையில் சிறப்பு யாகம் நடந்தது.

    இதையொட்டி கோபாலகிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோபால கிருஷ்ணர் முன்பு சிறப்பு யாகமும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை நடந்தது.
    Next Story
    ×