திசையன்விளை அருகே உள்ள பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் திருக்கல்யாணம்
திசையன்விளை அருகே உள்ள பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன்மொழி, ஆனைகுடி நாடார்கள், ஆனை பேரன் நாடார் மற்றும் கோனார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட பூரண கலா சமேத பிறவி பெருமாள் ஐயன் கோவிலில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை, ஊஞ்சல் உற்சவம், சுமங்கலி பூஜை முதலியவை நடைபெற்றது. திருக்கல்யாண விழாவில் கலந்துகொண்ட சுமங்கலிகளுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. அரசு விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.