search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மந்திராலயத்தில் சிறப்பு யாகம்
    X
    மந்திராலயத்தில் சிறப்பு யாகம்

    மந்திராலயத்தில் சிறப்பு யாகம்

    அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தில் உள்ள யோகிராம் சுரத்குமார் மந்திராலயத்தில் கொரோனா நோய் உலகில் இருந்து நீங்கவும், மக்கள் நோயில் இருந்து விடுபட்டு சுகமாக வாழவும் யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    அஞ்சுகிராமம் அருகே காணிமடத்தில் உள்ள யோகிராம் சுரத்குமார் மந்திராலயத்தில் கொரோனா நோய் உலகில் இருந்து நீங்கவும், மக்கள் நோயில் இருந்து விடுபட்டு சுகமாக வாழவும் யாகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் குருபூர்ணிமா மற்றும் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு காலையில் யோகிராம் சுரத்குமார் சிலைக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் தியானம், சாயரட்சை தீபாராதனையும், இரவில் கொரோனா நோயில் இருந்து விடுபட சிறப்பு மகா யாகமும் நடந்தது. இதில் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி. செல்வகுமார், இயக்க நிர்வாகிகள் சிவபன்னீர்செல்வன், கார்த்திக்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மந்திராலய நிர்வாகி தபஸ்வி பொன் காமராஜ் சுவாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×