search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

    திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி பவுர்ணமி கிரிவலம் ரத்து

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 5-ந் தேதி வைகாசி மாத பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி கிரிவலம் விசேஷமாக நடந்து வருகிறது அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அமலில் உள்ள ஊரடங்கால் கோவில் மூடப்பட்டுள்ளது.

    இதனால் கடந்த பங்குனி மாத பவுர்ணமி மற்றும் சித்திரை மாத பவுர்ணமி நாளில் கிரிவலம் வருவது தவிர்க்கப்பட்டது. அதேபோல வருகிற 5-ந் தேதி வைகாசி மாத பவுர்ணமி நாளில் கிரிவலமும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
    Next Story
    ×