search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்காமீஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்ட காட்சி
    X
    திருக்காமீஸ்வரர் கோவிலில் பஞ்ச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்ட காட்சி

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் தேர்திருவிழா ரத்து

    கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு நடைபெற இருந்த வைகாசி பிரம்மோற்சவ தேர்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவிலின் சிறப்பு அதிகாரி திருவரசன் தெரிவித்துள்ளார்.
    புதுவை வில்லியனூரில் பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை, திருக்காமீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ தேர்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மத விழாக்களை நடத்தக் கூடாது என தடை விதித்துள்ளது. அதன்படியும் புதுவை அரசின் இந்து சமய நிறுவன உத்தரவின் பேரிலும் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு நடைபெற இருந்த வைகாசி பிரம்மோற்சவ தேர்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவிலின் சிறப்பு அதிகாரி திருவரசன் தெரிவித்துள்ளார்.

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று பஞ்ச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 
    Next Story
    ×