என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சோலைமலை முருகன் கோவிலில் வைகாசி திருவிழா தொடக்கம்
Byமாலை மலர்27 May 2020 6:25 AM GMT (Updated: 27 May 2020 6:25 AM GMT)
மதுரை அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி மாதம் நடைபெறும் விசாக திருவிழா சண்முகார்ச்சனையுடன் தொடங்கியது.
மதுரை அழகர்மலை உச்சியில் முருகப் பெருமானின் 6-ம் படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் விசாக திருவிழா மிகவும் முக்கியமானதாகும். இந்த திருவிழா நேற்று காலை சண்முகார்ச்சனையுடன் தொடங்கியது.
தொடர்ந்து மாலையில் மகா தீபாராதனையும், சுவாமி புறப்பாடும் நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் மேள தாளம் முழங்க நடந்தது. சோலைமலை முருகன் கோவிலில் தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள், சுவாமி புறப்பாடு ஆகியவை வழக்கம் போல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாகமான ஜூன் 4-ந்தேதி காலை மூலவருக்கு பூஜைகளும், மாலையில் உற்சவர் புறப்பாடும் நடைபெறும். வருகிற 1-ந்தேதி முதல் அரசின் வழிகாட்டுதலின்படி திருவிழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து மாலையில் மகா தீபாராதனையும், சுவாமி புறப்பாடும் நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் மேள தாளம் முழங்க நடந்தது. சோலைமலை முருகன் கோவிலில் தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள், சுவாமி புறப்பாடு ஆகியவை வழக்கம் போல் நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாகமான ஜூன் 4-ந்தேதி காலை மூலவருக்கு பூஜைகளும், மாலையில் உற்சவர் புறப்பாடும் நடைபெறும். வருகிற 1-ந்தேதி முதல் அரசின் வழிகாட்டுதலின்படி திருவிழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X