search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரமணர்
    X
    ரமணர்

    உடல்மேல் பற்று இல்லாதவர் ரமணர்..

    ரமணர், “இந்த உடல் மீது நீங்கள் ஏன் இவ்வளவு பற்று வைத்து இருக்கிறீர்கள்? இந்த உடல் போகட்டும். நான் எங்கே போய்விட முடியும்? இங்கேதான் இருக்கிறேன்” என்று கூறிவிட்டார்.
    இடது கையில் உண்டான புற்றுநோய், ரமணரின் உயிரைப் பறிக்காமல் இருக்க, அவரது கையை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இதை ரமணர் ஏற்றுக் கொள்ளவில்லை.

    அப்போது அங்கு இருந்த சீடர்கள் சிலர் ரமணரைப் பார்த்து, “சாமி.. நீங்கள் பலரது உடல் நோயை தங்களது தவ வலிமையால் குணப்படுத்தி இருக்கிறீர்கள். இப்போது சீடர்களாகிய எங்களுக்காக, தாங்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி உடலை குணப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று மன்றாடினார்கள்.

    அதற்கு ரமணர், “இந்த உடல் மீது நீங்கள் ஏன் இவ்வளவு பற்று வைத்து இருக்கிறீர்கள்? இந்த உடல் போகட்டும். நான் எங்கே போய்விட முடியும்? இங்கேதான் இருக்கிறேன்” என்று கூறிவிட்டார்.
    Next Story
    ×