என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்28 Feb 2020 6:15 AM GMT
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறும்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ விழா நாளை (சனிக்கிழமை) இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறும்.
மாசி பிரம்மோற்சவ நாட்களில் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லாக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் மார்ச் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை திருக்கல்யாணம், அன்று மதியம் 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை போன்றவை நடைபெறும்.
விழாவில் 10-ந்தேதி இரவு தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம் 18 திருநடனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் சித்ராதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மாசி பிரம்மோற்சவ நாட்களில் உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லாக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாடவீதி உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேரோட்டம் மார்ச் மாதம் 6-ந் தேதி நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை திருக்கல்யாணம், அன்று மதியம் 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை போன்றவை நடைபெறும்.
விழாவில் 10-ந்தேதி இரவு தியாகராஜ சுவாமி பந்தம்பறி உற்சவம் 18 திருநடனத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் சித்ராதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X