என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவொற்றியூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை
Byமாலை மலர்24 Feb 2020 6:39 AM GMT (Updated: 24 Feb 2020 6:39 AM GMT)
எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மாசி மாத மகா சிவராத்திரியை அடுத்த அமாவாசை நாளில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அப்போது அனைத்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் உடுக்கை, பம்பை, சிலம்பாட்டத்துடன் அம்மன் வேடமிட்டு உக்கிரகமாக ஆடி ஊர்வலமாக சென்று சூறையாடுவதை ஐதீகமாக கொண்டாடி வருகிறார்கள்.
சிவபெருமான் தன் சக்தியை இழந்து பல சோதனைகளுக்கு ஆளானபோது பார்வதி, அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்து 18 பரிவாரங்களுடன் சென்று மயானத்தில் வைத்து அசுரனை வதம் செய்ததே மயான கொள்ளை நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலும் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் வாசலில் அனைத்து காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்களால் அசுரன் உருவம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அம்மன் வேடமிட்டு வந்த பக்தர்கள், ஆவேசத்துடன் ஓடி வந்து, அசுரனை வதம் செய்து காய்கறி, பழங்கள், பருப்புகளை சூறையாடினர். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
சிவபெருமான் தன் சக்தியை இழந்து பல சோதனைகளுக்கு ஆளானபோது பார்வதி, அங்காள பரமேஸ்வரியாக உருவெடுத்து 18 பரிவாரங்களுடன் சென்று மயானத்தில் வைத்து அசுரனை வதம் செய்ததே மயான கொள்ளை நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி எண்ணூர் விரைவு சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலும் நேற்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோவில் வாசலில் அனைத்து காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்களால் அசுரன் உருவம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அம்மன் வேடமிட்டு வந்த பக்தர்கள், ஆவேசத்துடன் ஓடி வந்து, அசுரனை வதம் செய்து காய்கறி, பழங்கள், பருப்புகளை சூறையாடினர். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X