என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விளக்குகளில் எத்தனை பொட்டுகள் வைக்கவேண்டும்?
Byமாலை மலர்22 Feb 2020 6:52 AM GMT (Updated: 22 Feb 2020 6:52 AM GMT)
நாம் குடியிருக்கும் வீட்டில் ஆத்மார்த்தமாக தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வர வீட்டில் அமைதியும், இன்பமும் பெருகும். பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக் கொள்வதால் தான் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் தினசரி வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே பலர் கடமைக்காக செய்கின்றனர். நாம் குடியிருக்கும் வீட்டில் ஆத்மார்த்தமாக தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வர வீட்டில் அமைதியும், இன்பமும் பெருகும். பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக் கொள்வதால் தான் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன.
தினசரி வீட்டில் விளக்கேற்றுவதால் ஐஸ்வர்யம் பெருகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். விளக்கு ஏற்றப்படுவதற்கு முன் விளக்கை கழுவி சுத்தம் செய்து ஈரம் போக துணி கொண்டு துடைத்து விட்டு சந்தனம் அதன் மேல் பொட்டு வைப்பதே ஆகம விதி. மஞ்சளைக் காட்டிலும் சந்தனம் சக்தி வாய்ந்தது. குத்து விளக்கில் மொத்தம் எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும்.
விளக்கின் மேல்பாகத்தில் ஒன்றும், விளக்கின் முகங்களில் ஐந்தும், விளக்கின் ஸ்தம்பத்தில் ஒன்றும், விளக்கின் பாதத்தில் ஒன்றும் ஆக எட்டு என்ற எண்ணிக்கையில் பொட்டிட வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும், சூரிய, சந்திர மற்றும் உயிர் சக்தி என எட்டு அல்லது மகாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் விளக்கில் வழிபாடு செய்யலாம்.
இந்த அடிப்படையில் பொட்டிட்டு வழிபாடு செய்து வர வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.
தினசரி வீட்டில் விளக்கேற்றுவதால் ஐஸ்வர்யம் பெருகி லட்சுமி கடாட்சம் உண்டாகும். விளக்கு ஏற்றப்படுவதற்கு முன் விளக்கை கழுவி சுத்தம் செய்து ஈரம் போக துணி கொண்டு துடைத்து விட்டு சந்தனம் அதன் மேல் பொட்டு வைப்பதே ஆகம விதி. மஞ்சளைக் காட்டிலும் சந்தனம் சக்தி வாய்ந்தது. குத்து விளக்கில் மொத்தம் எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும்.
விளக்கின் மேல்பாகத்தில் ஒன்றும், விளக்கின் முகங்களில் ஐந்தும், விளக்கின் ஸ்தம்பத்தில் ஒன்றும், விளக்கின் பாதத்தில் ஒன்றும் ஆக எட்டு என்ற எண்ணிக்கையில் பொட்டிட வேண்டும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும், சூரிய, சந்திர மற்றும் உயிர் சக்தி என எட்டு அல்லது மகாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் விளக்கில் வழிபாடு செய்யலாம்.
இந்த அடிப்படையில் பொட்டிட்டு வழிபாடு செய்து வர வீட்டில் சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X