என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா: விடிய, விடிய பக்தர்கள் தரிசனம்
Byமாலை மலர்22 Feb 2020 4:47 AM GMT (Updated: 22 Feb 2020 4:47 AM GMT)
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் நேற்று மகாசிவராத்திரி விழா நடந்தது. இதனையொட்டி வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம், காலசந்தி பூஜையும், 9 மணிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. முற்பகல் 11 மணிக்கு சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் உச்சிகாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு விநாயகர் அபிஷேகம், தீபாராதனை, 5 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி முதல் ஜாம பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு தங்கத்தேரில் சாமி, அம்மன் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். 8.30 மணிக்கு 108 சங்கு பூஜை நடந்தது.
9.30 மணிக்கு சிவராத்திரி 2-ம் ஜாமபூஜையும், 11.30 மணிக்கு ருத்ராபிஷேக பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் லிங்கோத்பவ 3-ம் ஜாமபூஜை, தீபாராதனை நடந்தது.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 4-ம் ஜாமபூஜை, 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. 9 மணிக்குசாமி வீதிஉலா நடக்கிறது. மகாசிவராத்திரியையொட்டி பக்தி பாடல்கள் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர்.
வேலூரை அடுத்த கருகம்பத்தூர் கிராமத்தில் உள்ள மனோன்மணி அம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு கோபூஜையுடன் மகாசிவராத்திரி தொடங்கியது. இரவு 2 மணிவரை 5 கால யாகபூஜை நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சாமி வீதி உலா நடக்கிறது.
தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு விநாயகர் அபிஷேகம், தீபாராதனை, 5 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி முதல் ஜாம பூஜை நடந்தது. இரவு 7.30 மணிக்கு தங்கத்தேரில் சாமி, அம்மன் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர். 8.30 மணிக்கு 108 சங்கு பூஜை நடந்தது.
9.30 மணிக்கு சிவராத்திரி 2-ம் ஜாமபூஜையும், 11.30 மணிக்கு ருத்ராபிஷேக பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் லிங்கோத்பவ 3-ம் ஜாமபூஜை, தீபாராதனை நடந்தது.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 4-ம் ஜாமபூஜை, 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. 9 மணிக்குசாமி வீதிஉலா நடக்கிறது. மகாசிவராத்திரியையொட்டி பக்தி பாடல்கள் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர்.
வேலூரை அடுத்த கருகம்பத்தூர் கிராமத்தில் உள்ள மனோன்மணி அம்மன் கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு கோபூஜையுடன் மகாசிவராத்திரி தொடங்கியது. இரவு 2 மணிவரை 5 கால யாகபூஜை நடந்தது. பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) சாமி வீதி உலா நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X