என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்17 Feb 2020 6:11 AM GMT (Updated: 17 Feb 2020 6:11 AM GMT)
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதிகாலை 5.10 மணிக்கு கொடிமரத்தில் காப்பு கட்டிய த.அசோகன் வல்லவராயர் திருவிழா கொடியினை ஏற்றினார். அதன்பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது.
திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், கோவில் அலுவலர்கள் பிச்சையா, சிவா, மணியம் நெல்லையப்பன், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும் தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மன் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 10-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், கோவில் அலுவலர்கள் பிச்சையா, சிவா, மணியம் நெல்லையப்பன், ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனரும் தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மன் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 10-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X