என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி முனியப்ப சாமி கோவிலில் 260 ஆடுகள் பலியிட்டு சிறப்பு வழிபாடு
Byமாலை மலர்17 Feb 2020 6:09 AM GMT
திருப்பதி முனியப்ப சாமி கோவிலில் 260 ஆடுகள் பலியிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் சாப்பிட்டு சென்றனர்.
பரமத்திவேலூர் அருகே சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி முனியப்ப சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதி முனியப்ப சாமி கோவில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை சென்றடைந்தனர்.
இதையடுத்து மதியம் 2 மணிக்கு முத்துகருப்பண்ண சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை வரை 260 ஆடுகள் பலியிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் சாப்பிட்டு சென்றனர்.
இதையடுத்து மதியம் 2 மணிக்கு முத்துகருப்பண்ண சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை வரை 260 ஆடுகள் பலியிடப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானம் சாப்பிட்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X