என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோணலூர் கிராமத்தில் ஆற்றுத் திருவிழா
Byமாலை மலர்20 Jan 2020 4:59 AM GMT (Updated: 20 Jan 2020 4:59 AM GMT)
கோணலூர் கிராமத்தை சேர்ந்த செல்வமுத்து மாரியம்மன் மற்றும் அவரின் தங்கையான காட்டுமலையனூர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக ஆற்றிற்கு வந்தனர்.
வேட்டவலம் அருகே கோணலூர் கிராமத்தில் செல்லும் துரிஞ்சலாற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். அதன்பின்னர் பல ஊர்களின் வழியே சென்று தென்பெண்ணை ஆற்றில் கலக்கும். இந்த ஆற்றில் ஆண்டுதோறும் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டின் ஆற்றுத் திருவிழா நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கியது.
விழாவில் கோணலூர் கிராமத்தை சேர்ந்த செல்வமுத்து மாரியம்மன் மற்றும் அவரின் தங்கையான காட்டுமலையனூர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக ஆற்றிற்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை செய்து அதன்பின்னர் உற்சவர்கள் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோணலூர், காட்டுமலையனூர் கிராமங்களைச் சேர்ந்த கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேட்டவலம் போலீசார் செய்திருந்தனர்.
விழாவில் கோணலூர் கிராமத்தை சேர்ந்த செல்வமுத்து மாரியம்மன் மற்றும் அவரின் தங்கையான காட்டுமலையனூர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக ஆற்றிற்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை செய்து அதன்பின்னர் உற்சவர்கள் ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோணலூர், காட்டுமலையனூர் கிராமங்களைச் சேர்ந்த கோவில் அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வேட்டவலம் போலீசார் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X