என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்
Byமாலை மலர்17 Jan 2020 5:12 AM GMT (Updated: 17 Jan 2020 5:12 AM GMT)
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
108 வைணவ தலங்களில் 7 ஆழ்வார்களால் நாலாயிர திவ்யபிரபந்தம் அருளப்பெற்று, திருப்பதி, ஸ்ரீரங்கத்திற்கு அடுத்த 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் திகழ்கிறது.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சங்க்ரமண பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 7 நாட்கள் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், தாயார் தேரில் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் கிழக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சங்க்ரமண பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 7 நாட்கள் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், தாயார் தேரில் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு கும்பகோணம் கிழக்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X