என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிகிறார்கள்
Byமாலை மலர்14 Jan 2020 3:33 AM GMT (Updated: 14 Jan 2020 3:33 AM GMT)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
16-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணியளவில், சுவாமி அலைவாயுகந்தபெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபம் செல்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை நிற மற்றும் காவி நிற ஆடைகளை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள்.
16-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணியளவில், சுவாமி அலைவாயுகந்தபெருமான் பரிவேட்டைக்காக வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபம் செல்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் கோவிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பச்சை நிற மற்றும் காவி நிற ஆடைகளை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X