என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி
Byமாலை மலர்4 Jan 2020 5:59 AM GMT (Updated: 4 Jan 2020 5:59 AM GMT)
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை மறுநாள்(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டிற்கான விழா கடந்த 27-ந்தேதி பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவின் 8-வது நாளான நேற்று காலையில் சாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
இதையடுத்து பல்வேறு வகையான பழங்கள் அலங்காரத்தில் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பங்களா உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு வகையான பழங்களால் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நாலாயிர திவ்யபிரபந்தம் வாசிக்கப்பட்டு, சாற்று முறை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் பத்து உற்சவம் முடிவடைகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
இதையடுத்து பல்வேறு வகையான பழங்கள் அலங்காரத்தில் தேவநாதசுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் பங்களா உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு வகையான பழங்களால் தேவநாதசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் நாலாயிர திவ்யபிரபந்தம் வாசிக்கப்பட்டு, சாற்று முறை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் பத்து உற்சவம் முடிவடைகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள்(திங்கட்கிழமை) வைகுண்ட ஏகாதசியையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X