search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரெங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வஸ்திர மரியாதை கொண்டு வந்த போது எடுத்தபடம்.
    X
    ரெங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் வஸ்திர மரியாதை கொண்டு வந்த போது எடுத்தபடம்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வஸ்திர மரியாதை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திர மரியாதை செலுத்தப்பட்டது. ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் அவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
    கி.பி.1320-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடந்த மொகலாயர்களின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது.

    நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் இக்கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன. திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்டகாலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி.

    அதன்படி, ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி அனில்குமார்சிங்கால், பொக்கிஷ பொறுப்பாளர் குருராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் அவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் காலை 7 மணிக்கு புறப்பட்டு திருப்பதி வஸ்திர மரியாதை வீதிஉலா நடந்தது. இதைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து வஸ்திரமரியாதையை அறங்காவலர்குழு தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
    Next Story
    ×