search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு பந்தக்கால் நட்டபோது எடுத்த படம்.
    X
    திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு பந்தக்கால் நட்டபோது எடுத்த படம்.

    தியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது

    திருவையாறில், அடுத்த மாதம்(ஜனவரி) 11-ந் தேதி தியாகராஜர் ஆராதனை விழா ெதாடங்குகிறது.
    கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா அடுத்த மாதம்(ஜனவரி) 11-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடக்கிறது.

    இதையொட்டி தியாகராஜர் சமாதி வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் தியாகபிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் நிர்வாகிகள் பந்தக்காலை நட்டு வைத்தனர்.

    இதில் சபை அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரே‌‌ஷ் மூப்பனார், கணேசன், பஞ்சநதம், டெக்கான் மூர்த்தி, செயலாளர் பழனிவேல், மு‌‌ஷ்ணம் ராஜாராவ், தொழிலதிபர் பி.எல்.ஏ.சிதம்பரம், டாக்டர் ராதிகா மைக்கேல், உதவி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தியாகராஜர் முக்தி அடைந்த பு‌‌ஷ்யபகுல பஞ்சமி திதியான அடுத்த மாதம் 15-ந் தேதி தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். இதையொட்டி அன்று காலை திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அங்கிருந்து தியாகராஜர் சிலை உஞ்சவிருத்தி பஜனையுடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆராதனை பந்தலை வந்தடையும்.

    அதைத்தொடர்ந்து தியாகராஜர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு அபிஷேகம் நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள், பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×