என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்5 Dec 2019 7:39 AM GMT (Updated: 5 Dec 2019 7:39 AM GMT)
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கார்த்திகை ஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம், அய்யா வைகுண்டசாமி தன்னுடைய பக்தர்களுக்கு கூறிய அறிவுரைகளை ஏடாக வாசிப்பது வழக்கம்.
இந்த வருட ஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் முதல் நாளில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு வாகன பவனியும், தொடர்ந்து அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
விழாவின் 15-ம் நாளான 20-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அய்யா வைகுண்டசாமி அம்மையாரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி ஏடாக வாசிக்கப்படுகிறது.
முன்னதாக பக்தர்கள் அய்யாவின் திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதும், முடிவில் பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏடு வாசிப்பின் 17-ம் நாள் விழாவான 22-ந் தேதி தலைமை பதி பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி ஏடாக வாசிக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து பெரிய ஓம் படிப்பும், பின்னர் பக்தர்களுக்கு இனிமம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த வருட ஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. விழாவின் முதல் நாளில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், ஏடு வாசிப்பு தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு வாகன பவனியும், தொடர்ந்து அன்ன தர்மமும் நடைபெறுகிறது.
விழாவின் 15-ம் நாளான 20-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அய்யா வைகுண்டசாமி அம்மையாரை திருமணம் செய்யும் நிகழ்ச்சி ஏடாக வாசிக்கப்படுகிறது.
முன்னதாக பக்தர்கள் அய்யாவின் திருக்கல்யாணத்திற்கு சீர்வரிசை கொடுப்பதும், முடிவில் பக்தர்களுக்கு இனிமம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஏடு வாசிப்பின் 17-ம் நாள் விழாவான 22-ந் தேதி தலைமை பதி பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி ஏடாக வாசிக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், தொடர்ந்து பெரிய ஓம் படிப்பும், பின்னர் பக்தர்களுக்கு இனிமம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X