என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்5 Dec 2019 6:28 AM GMT (Updated: 5 Dec 2019 6:28 AM GMT)
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆனி, ஆடி, ஆவணி, கார்த்திகை, தை மாத திருவிழா சிறப்பு வாய்ந்தவை. இந்தாண்டு கார்த்திகை மாத திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 10.35 மணிக்கு சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை ஆகியோர் கம்பத்தடி மண்டபம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருவிழாவையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி காலை, மாலை என இருவேளையும் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். வருகிற 13-ந் தேதி வரை விழா நடக்கிறது.
வருகிற 10-ந் தேதி முக்கிய விழாவான திருக் கார்த்திகை தினத்தன்று கோவில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகிலும் ெசாக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
காலை 10.35 மணிக்கு சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்-பிரியாவிடை ஆகியோர் கம்பத்தடி மண்டபம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருவிழாவையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி காலை, மாலை என இருவேளையும் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். வருகிற 13-ந் தேதி வரை விழா நடக்கிறது.
வருகிற 10-ந் தேதி முக்கிய விழாவான திருக் கார்த்திகை தினத்தன்று கோவில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படும். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகிலும் ெசாக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X