search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி லட்டு
    X
    திருப்பதி லட்டு

    மிகவும் பிரபலமான திருப்பதி லட்டு உருவான கதை

    வெங்கடேச பெருமாளுக்கு அடுத்து திருப்பதி என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது லட்டுதான், அந்த அளவிற்கு திருப்பதி லட்டு மிகவும் பெயர் பெற்று பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    வெங்கடேச பெருமாளுக்கு அடுத்து திருப்பதி என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது லட்டுதான், அந்த அளவிற்கு திருப்பதி லட்டு மிகவும் பெயர் பெற்று பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    திருப்பதி லட்டு

    சாமி தரிசனம் முடிந்தவுடன் லட்டு வாங்கிய பின்புதான் பக்தர்களுக்கு ஏழுமலை யான் அருள் கிடைத்த திருப்தி ஏற்படும். திருப்பதியையும் லட்டுவையும் பிரிக்க முடியாத அளவுக்கு பக்தர் மனதில் திருப்பதி லட்டு நீங்கா இடம் பெற்றுள்ளது. கி.பி.830 ஆம் ஆண்டில் தான் முதல் முதலாக பல்லவர்கள் ஆட்சி காலத்தில், ஏழுமலையான் கோவி லுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    பிரசாதம்

    அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல வேண்டு மென்றால் பல நாட்கள் ஆகும். தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீட்டுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.

    லட்டு உருவான விதம்

    1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது. 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்களை சுண்டி இழுக்கும் வகையில் ஏழுமலையான் அருளுடன் மிகுந்த சுவையுடன் திருப்பதி லட்டு உள்ளது. ஆரம்பத்தில் லட்டு ஒன்று எட்டு அனாவிற்கு விற்கப்பட்டது. தற்போது பக்தர் களுக்கு சலுகை விலையில் ரூ.70க்கு 4 லட்டும், கூடுதல் லட்டு ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    லட்டு என்பது சமஸ்கிருத வார்த் தையான ‘லட்டுகா’ என்பதன் சுருக்கம் ஆகும். அதற்கு ‘சின்ன பந்து’ என்று பொருள். திருப்பதி லட்டும் பந்து வடிவில் இருப்பதால், அதற்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் அது ‘லட்டு’ என்றே சொல்லப்படுகிறது.

    பெருமாள் நினைத்தால் தான் கிடைக்கும்


    திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக் கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி வேங்கடவனின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப் படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

    ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைக்கு திருப்பதி லட்டு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது.

    திருமலையில் பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடப்பள்ளி மிகவும் பெரியது. இந்தப் புனிதமான மடப் பள்ளியில் லட்டு மட்டும்தான் என்று இல்லை. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயாசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நைவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டுதான் முதலிடம். ஆனால், ஆரம்ப காலங்களில் ‘மனோகரம்’ என்கிற பிரசாதம்தான் இருந்துள்ளது.

    லட்டு பொட்டு

    திருப்பதி கோவிலில் சம்பங்கி பிரதாக்‌ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது. சுமார் 200 பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த லட்டு பணியாளர்கள் பொட்டு கார்மீகலு என அழைக்கப்படுகின்றனர். தற்போது ஒரு நாளைக்கு 2.80 லட்சம் லட்டுக்கள் தயாரிக்கப் படுகிறது. திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் விழாக்காலங்களில் 5 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லட்டுக்களை செய்யும் திறன் கொண்டதாக லட்டு கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

    லட்டு தயாரிக்க பயன்படும் பொருட்கள்

    லட்டு தயாரிக்க பயன்படுத் தப்படும் பொருட்கள் மற்றும் அதன் விகிதாச்சாரத்தின் பட்டியல் லட்டுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு 6 முறை திட்டம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை ஆகியவை லட்டு தயாரிக்க பயன்படுத்தபடும் மூலப்பொருட்கள். நாள் ஒன்றுக்கு கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாக லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி தேவஸ் தானத்தால் இந்த பொருட்களுக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல் செய்யப்படுகிறது.

    3 வகையான லட்டு

    திருப்பதியில் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு என்ற 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகிறது. ஆஸ்தான லட்டு முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கிய பிரமுகர் களுக்கு வழங்கப் படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களைவிட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

    கல்யாண உற்சவ லட்டு

    கல்யான உற்சவ லட்டுக்கள் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.

    புரோகிதம் லட்டு

    புரோகிதம் லட்டு பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக் கப்படுகிறது. மூன்றுவகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் தான் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

    புவிசார் குறியீடு

    திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும்விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு 2008 ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவுசெய்தது. 2009 ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999 படி பதிவு செய்யப்பட்டது. இதனால் மற்றவர்கள் அதே பெயரில் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்டு தயார் செய்ய ரூ.37 செலவாகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.200 கோடி அளவுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

    பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு


    இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு சலுகை விலையில் ரூ.20-க்கு 2 லட்டு, ரூ.50க்கு 2 லட்டு என்று மொத்தம் 70 ரூபாய்க்கு 4 லட்டு வழங்கப்படுகிறது. நடைபாதை தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசம் ரூ.20க்கு 2 லட்டு, ரூ.50க்கு 2 லட்டு என்று மொத்தம் 70 ரூபாய்க்கு 5லட்டு வழங்கப்படுகிறது. ரூ.300 தரிசனத்தில் செல்பவர்களுக்கு 2 லட்டு வழங்கப்படுகிறது. இதுபோக லட்டு தேவைப்படும் பக்தர்கள் ஒரு லட்டு ரூ.50 வீதம் 10 லட்டுகள் வரை வாங்கி கொள்ளலாம். கல்யாண உற்சவ பெரிய லட்டு ரூ.200 க்கும் வடை ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. லட்டு விநியோகிக்க மட்டும் 62 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×