என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
Byமாலை மலர்18 Nov 2019 4:12 AM GMT (Updated: 18 Nov 2019 4:12 AM GMT)
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இக்கோவிலுக்கு உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இங்கும் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு நகரின் மையப் பகுதியில் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.
கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீப விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டியும், விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வழியிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கார்த்திகை மாத பிறப்பையொட்டி நகரில் பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
இங்கும் பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு நகரின் மையப் பகுதியில் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.
கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தீப விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டியும், விடுமுறை நாள் என்பதாலும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வழியிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கார்த்திகை மாத பிறப்பையொட்டி நகரில் பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X