என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா
Byமாலை மலர்23 Oct 2019 6:00 AM GMT (Updated: 23 Oct 2019 6:00 AM GMT)
ஹரிப்பாடு, மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலப்புழை மாவட்டம், ஹரிப்பாடு மண்ணாரசாலை நாகராஜா கோவிலில் ஆயில்ய திருவிழா கடந்த 21-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாளில் வழக்கமான பூஜைகளுடன் மாலை 3 மணிக்கு நாகராஜா விருது வழங்கும் விழா நடந்தது. இதில், பிரபல இசை கலைஞர்கள் நாராயணன் நம்பியார், குமார கேரள வர்மா, கலாமண்டலம் வாசு பிசாரடி, நிர்மலா பணிக்கர் ஆகியோருக்கு நாகராஜா விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாராதனை, மோகினியாட்டம், நடிகை திவ்யா உண்ணியின் நடனம் போன்றவை நடைபெற்றது.
விழாவில் நேற்று நாகராஜாவுக்கும், சர்ப்பயக்சியம்மாவுக்கும் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு உச்ச பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் கதகளி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணி முதல் 8 மணி வரை பாகவத பாராயணம், மாலையில் இசை கச்சேரி, திவாதிரைக்களி போன்றவை நடக்கிறது.
தொடர்ந்து மகா தீபாராதனை, மோகினியாட்டம், நடிகை திவ்யா உண்ணியின் நடனம் போன்றவை நடைபெற்றது.
விழாவில் நேற்று நாகராஜாவுக்கும், சர்ப்பயக்சியம்மாவுக்கும் திருவாபரணம் அணிவிக்கப்பட்டு உச்ச பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலையில் கதகளி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம், காலை 6 மணி முதல் 8 மணி வரை பாகவத பாராயணம், மாலையில் இசை கச்சேரி, திவாதிரைக்களி போன்றவை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X