என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்12 Oct 2019 5:01 AM GMT (Updated: 12 Oct 2019 5:01 AM GMT)
பட்டிவீரன்பட்டி பகுதியில் 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.
பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன ஐயம்பாளையம், பெரிய ஐயம்பாளையம், சித்தரேவு ஆகிய 6 ஊர்களில் முத்தாலம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையடுத்து முதல் நாள் காவல்கார சுவாமி பூஜைக்கு பின்பு அம்மனுக்கு கண் திறந்து ஆடை, தங்க ஆபரணங்கள் அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் செய்து முத்தாலம்மனை மேளதாளம், வாண வேடிக்கை முழங்க கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் நாள் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், மா விளக்கு மற்றும் கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து 3-ம் நாளான நேற்று முத்தாலம்மன் சிங்க வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் முளைப்பாரி ஊர்வலத்துடன் முன்செல்ல மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் பூஞ்சோலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பூஞ்சோலை சென்றடைந்தது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவையொட்டி சின்ன ஐயம்பாளையத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். மேலும் உறி அடித்தல், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கபடி போட்டி ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள விழா குழுவினரும், கோவில் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
இதையடுத்து முதல் நாள் காவல்கார சுவாமி பூஜைக்கு பின்பு அம்மனுக்கு கண் திறந்து ஆடை, தங்க ஆபரணங்கள் அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் செய்து முத்தாலம்மனை மேளதாளம், வாண வேடிக்கை முழங்க கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 2-ம் நாள் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல், மா விளக்கு மற்றும் கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து 3-ம் நாளான நேற்று முத்தாலம்மன் சிங்க வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் முளைப்பாரி ஊர்வலத்துடன் முன்செல்ல மேளதாளம், வாண வேடிக்கைகளுடன் பூஞ்சோலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பூஞ்சோலை சென்றடைந்தது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த திருவிழாவையொட்டி சின்ன ஐயம்பாளையத்தில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. இதை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர். மேலும் உறி அடித்தல், கலை நிகழ்ச்சிகள் மற்றும் கபடி போட்டி ஆகியவை நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊர்களில் உள்ள விழா குழுவினரும், கோவில் நிர்வாகிகளும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X