
அந்த வகையில் இந்த ஆண்டு திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்படும் வைபவம் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது. இதற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பிரமாண்டமான மாலை ஆண்டாள் நாச்சியாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீப வழிபாடும் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர்.ஆண்டாள் சூடிய மாலை கிளம்பும் நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு செல்லும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் ராம்கோ நிறுவனம் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளன்று கருட சேவையின் போது ஏழுமலையான், ஆண்டாள் சூடிய மாலையை அணிந்துகொண்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.