search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீனிவாசபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
    X
    சீனிவாசபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

    சீனிவாசபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா

    சித்தையன்கோட்டையில் உள்ள ஸ்ரீதேவி- பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையில் ஸ்ரீதேவி- பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சீனிவாசபெருமாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. நேற்று முன்தினம் அன்னபட்சியில் சுவாமி அமர்ந்திருப்பது போல் மலர்களை கொண்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அன்றைய தினம் மாலை 7 மணிக்கு தும்மலப்பட்டியை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள், கோவில் முன்பு கரகாட்டம் மற்றும் கும்மியாட்டம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று சிறப்பு அலங்காரத்தில் சீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் இன்று (வியாழக்கிழமை) ராஜாதிராஜாவாக பெருமாள் இருப்பது போலவும், 5-ந்தேதி அனுமந்த வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட இருக்கிறது. வருகிற 8-ந் தேதி கருடக்கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அன்று அன்னதானம் நடைபெறுகிறது.
    Next Story
    ×