
இதன் விளைவாக அவருக்கு தாமரைப்பூ மூலம் பெண் குழந்தை கிடைத்ததால் அக்குழந்தைக்கு கமலவல்லி என பெயரிட்டு வளர்த்தார். பருவ வயதை அடைந்ததும் ரெங்கநாதருடன் ஐக்கியமானார் கமலவல்லி. தனது மகளின் நினைவாக சோழமன்னன் எழுப்பிய கோவிலே உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலாகும்.
இக்கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அதாவது பங்குனி மாதம் ஆறாம் திருநாளன்று உற்சவர் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பாடாகி உறையூர் கோவிலில் எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதித்து வருகிறார்.
திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வந்தன.
இந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9 மணிக்கு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது.
தொடர்ந்து வருகிற 1-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். வருகிற 1-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் காலை 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.