என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்21 Aug 2019 3:54 AM GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் கோவிலில் இருந்து கொடிப்பட்டம் புறப்பட்டு, ஒன்பது சந்திகளுக்கும் சென்று மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.20 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய கற்பக வீரகுமார் பட்டர் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றினார்.
தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், எண்ணெய், தைலம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களாலும், பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது.
மாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்த பின்னர் கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர், அஸ்திரதேவருடன் யானை தந்தப்பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளில் உலா வந்த பின்னர் கோவிலை சேர்ந்தார்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, தேவார இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், கலைநிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
2-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பின்னர் கோவிலில் இருந்து கொடிப்பட்டம் புறப்பட்டு, ஒன்பது சந்திகளுக்கும் சென்று மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதிகாலை 5.20 மணிக்கு கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில், காப்பு கட்டிய கற்பக வீரகுமார் பட்டர் இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றினார்.
தொடர்ந்து கொடிமர பீடத்துக்கு மஞ்சள், பால், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், எண்ணெய், தைலம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களாலும், பூஜையில் வைக்கப்பட்ட கும்ப கலசத்தில் உள்ள புனித நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கொடிமர பீடம் தர்ப்பை புற்களாலும், வண்ண மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சோடஷ தீபாராதனை நடந்தது.
மாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்த பின்னர் கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர், அஸ்திரதேவருடன் யானை தந்தப்பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளில் உலா வந்த பின்னர் கோவிலை சேர்ந்தார்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, தேவார இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், கலைநிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.
2-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், வள்ளி அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 10-ம் நாளான வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X