search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அத்திவரதர் 15-வது நாளாக நீல நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    X
    அத்திவரதர் 15-வது நாளாக நீல நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    15-வது நாளாக பக்தர்களுக்கு காட்சி நீல நிற பட்டாடையில் அத்திவரதர்

    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் 15-வது நாளான நேற்று நீல நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதையொட்டி நேற்று 15-வது நாளாக அத்திவரதர் நீல நிற பட்டாடை உடுத்தி, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அப்போது, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் உலகத்தில் இருந்து வந்த பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். நேற்று பிற்பகல் 1 மணி வரை சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×